Archive for April 2018
காவேரி வடக்கு காட்டுயிர்ச் சரணாலயம்
காவேரி வடக்கு காட்டுயிர்ச் சரணாலயம்
கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் பரவியுள்ள 504.33 சதுர கி.மீ பரப்பில் அமைந்த இச்சரணாலயம் ஏற்படுத்தப்பட்டது 2014ல். ஓசூர் மற்றும் தருமபுரி வனக்கோட்டங்களை உள்ளடக்கியத்து இச்சரணாலயம். புதர்காடு, வறண்ட இலையுதிர் காடு, காவிரி ஆற்றின் கரையோரமாக நீர்மத்தி Terminalia arjuna நிறைந்த ஆற்றோரக் காடு முதலிய வாழிடங்களைக் கொண்டது இப்பகுதி. நரை அணில், யானை, சிறுத்தை, கரடி, ஆற்று நீர்நாய், செம்புள்ளிப் பூனை, அழுங்கு, குள்ள மான், கடம்பை மான் போன்ற 35 வகை பாலுட்டிகளும் மற்றும் மீன்பிடி கழுகு, மஞ்சள்திருடி கழுகு போன்ற சுமார் 100க்கும் மேற்பட்ட பறவை வகைகளும், மலைப்பாம்பு, முதலை போன்ற ஊர்வனங்கள் யாவும் இச்சரணாலயத்தில் பதிவுசெய்யப்படுள்ளன.
கர்நாடக மாநிலத்திலுள்ள கொள்ளேகால் வனக்கோட்டம், பிலகிரிரங்கஸ்வாமி கோயில் காட்டுயிர் சரணாலயம், தமிழகத்தில் ஈரோடு வனக்கோட்டம் முதலிய வனப்பகுதிகள் இந்தச் சரணாலயத்தைச் சுற்றியுள்ளன. இதனால் பல வித காட்டுயிர்கள் குறிப்பாக யானைகளின் இடம்பெயர்விற்கு இப்பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.